மாணவர்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய்க்குரிய அறிகுறிகள் – வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க!

0
42

நாட்டில் நாளாந்தம் 3 முதல் 4 பேர் வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்ப் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும், ஒவ்வொரு வருடமும் இலங்கையில் 2,000 முதல் 3,000 வரையிலான வாய்ப் புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர். 

அத்துடன், பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய்க்குரிய ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.