ஐ.சி.சி. சம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பங்காளதேஷ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
போட்டியில் 229 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ஓட்டங்களை அடித்து அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 51 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் அதில் 8 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்தியா தரப்பில் குறைந்த இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் அடித்த வீரர் என்ற தவானின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.