இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறவில்லை – காவல்துறை

0
53

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் பெண்ணின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.இஷாரா செவ்வந்தி எனப்படும் குறித்த பெண் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்ற தகவல் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண் மத்துகம பகுதியில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.