வறட்சியான காலநிலையால் 12,308 பேர் பாதிப்பு!

0
27

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 12,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை, வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையால் 7,000க்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்பில் களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்திலுள்ள மத்துகம பிரதேச செயலகப் பிரிவிலும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள வெலிகெபொல, எஹெலியகொட மற்றும் கலவான பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிப்பவர்கள் குடிநீர் பற்றாக்குறையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.