வெடிபொருட்களுடன் 24 வயதுடைய சந்தேக நபர் கைது!

0
39

பொரளையில் சந்தேக நபர் ஒருவர் வெடிக்காத நிலையில் உள்ள வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த ,ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து ஒரு எல்.எம்.ஜி தோட்டா மற்றும் 7 ரி-56 வெடிக்காத நிலையில் உள்ள தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்லையில் வசிக்கும் 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.