”அரசாங்கம் இன்று அலங்கோலமாக மாறியுள்ளது”

0
22

பொருளாதார ரீதியாக நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டிலே தோல்வி அடைந்த இந்த அரசாங்கமானது, தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வெற்றி பெற்று இன்று அலங்கோலமான அரசாங்கமாக மாறியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் வடகொழும்பு புளூமெண்டல் வட்டாரத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான உடையார் சிவரஞ்சனின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக வடகொழும்பு புளூமெண்டல் வீரமஹா காளியம்மன் கோயிலில்  விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே மனோ கணேசன்  இவ்வாறு தெரிவித்தார்.