கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

0
34

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கவுதம் கம்பீரின் மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 22ஆம் திகதி இந்த கொலை மிரட்டல் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கவுதம் கம்பீர் டெல்லி காவல்துறையிடம் முறைப்பாடளித்துள்ளார்.

இதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குஜராத்தை சேர்ந்த 21 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவரே இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் குறித்த மாணவன் டெல்லி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.