தமிழ் தேசிய பேரவையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

0
20

தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர்களுக்கும் அதன் தலைமைகளுக்கும் இடையிலான யாழ் மாவட்ட சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மண்டபத்தில் தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசிய பேரவையின் தேர்தல் கால சவால்கள், எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜனநாயக தமிழரசு கட்சியின் உப செயலாளர் நாவலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வெற்றி பெற்ற உறுப்பினர்கள், அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.