வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று புதன்கிழமை (21) அறிவித்திருந்த போதிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென இன்று வியாழக்கிழமை (22) அறிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா – எல, கட்டுநாயக்கா, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.