09 வது நீடிக்கப்பட்ட வழங்கல் மேலாண்மை பாடநெறியை முடித்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்

0
9

9வது நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

09 வது நீடிக்கப்பட்ட வழங்கல் மேலாண்மை பாடநெறியை முடித்த அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதியின் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்போது, அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் டி.ஜி.எம் வீரரத்னவுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

பாடநெறியின் கடற்படைப் பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற லெப்டினன்ட் கமாண்டர் எஸ்.ஒய்.எச்.கே கருணாரத்னவுக்கும், பாடநெறியை முடித்ததற்காக மிகவும் உற்சாகமான அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் எஸ்.டபிள்யூ.ஜி.எம்.கே.பி விஜயகோனுக்கும் விருது மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

சான்றிதழ்களை வழங்கிய பின்னர் உரையாற்றிய கடற்படைத் தளபதி, நிறுவன வளர்ச்சிக்கு பயிற்சியும் மேம்பாடும் அவசியம் என்பதால், அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்ந்து கனிஷ்ட அதிகாரிகளை அதை நோக்கி வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.கல்வித் துறையில் சாதனைகள் தொழில்முறை திறனை அடைவதற்கு சிறந்த உந்துதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் அமைகின்றன என்று அவர் கூறினார்.

மேலும், இந்த நோக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கடற்படை மற்றும் கடல்சார் அகடமி மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயிற்சி ஊழியர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.