யாழில் இளைஞர் வெட்டிப் படுகொலை!

0
20

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞர் ஒருவர் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் என்ற இளைஞனே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.