கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 8 மணி முதல் இரவு 8.30 வரை 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
பேலியகொடை, சீதுவை நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.