அமெரிக்காவில் வரலாறு காணாத மழை வெள்ளம்: 52 பேர் பலி!

0
9

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 ஆம் திகதி சில மணி நேரத்தில் 280 மில்லி மீற்றர் மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது.

இதன்​ காரண​மாக கடந்த 5 ஆம் திகதி டெக்​சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்​பட்​டன. இதில் 37 பேர் உயி​ரிழந்​தனர்.

மேற்கு கெர் பகு​தி​யில் மாணவி​களுக்​கான சிறப்பு முகாம் நடை​பெற்​றது. இதில் 750 மாணவி​கள் தங்​கி​யிருந்​தனர். குவாடலூப் நதி வெள்​ளத்​தில் சிறப்பு முகாமின் கூடாரங்கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. பெரும்​பாலான மாணவி​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். 15 மாணவி​கள் சடலங்​களாக மீட்​கப்​பட்​டனர். 27 மாணவி​களை காணவில்​லை.

சுமார் 1,000 இற்கும் மேற்​பட்ட மீட்​புப் படை வீரர்​கள் இரவு, பகலாக வெள்ள நிவாரண பணி​களில் ஈடு​பட்டு உள்​ளனர். ஹெலிக்​கொப்​டர்​கள், ரோந்து படகு​கள் மூலம் காணா​மல்​ போன மாணவி​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.