80 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வைத்தே இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ 200 கிலோ ஐஸ் ரக போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
62 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.