விஷால் இயக்குனராக அறிமுகமாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது.
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பதும். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பல மாதங்களாக அந்த படம் கிடப்பில் இருக்க, அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தினார் விஷால். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாம். இதற்காக விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் லண்டன் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது