ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – ஜீ எல் பீரிஸ்

0
359

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித் துள்ளார்.

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் அத்தோடு பாடசாலைகள் மிக விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து பாடசாலைகளையும் மிக விரைவில் திறப்பதற்காகச் சுகாதார நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  மேல் மாகாணத்தில் வசிக்கும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏனைய மாகாணங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும் மிக விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.