மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக மழையில்லாத காரணத்தினால் கடுமையான வறட்சி நிலவிவந்ததுடன்
அதிகரித்த வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்தனர்
இதனிடையே, தற்போது மழைபெய்வதனால் விவசாய நவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.