நேரடியாக களத்தில் பணியாற்றும் கிராம சேவையாளர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான முக்கவசம் மற்றும் தொற்றுநீக்கிகள் இன்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் காரணமாக தொடர்ச்சியான பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தேவைகள் நிமித்தம் நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பு பட்டு சேவையாற்றும் கிராம சேவையாளர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றோரை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முக்கவசம் மற்றும் தொற்றுநீக்கிகள் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரனிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக பணியினை முன்னெடுத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான யூ மெடிக்கா நிறுவனத்தின் அனுசரணையில் நிறுனத்தின் உத்தியோகத்தர்களினால் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.