பாகிஸ்தானில் விளையாட்டுப் பந்து என நினைத்து கையெறி குண்டை எடுத்து விளையாடிய மூன்று குழந்தைகள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. கையெறி குண்டை பந்து என நினைத்த 10-14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தூக்கி எறிந்து விளையாடியதில் குண்டு வெடித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து கையெறி குண்டுகள் பாகிஸ்தானுக்கு கள்ளசந்தை மூலமாக வருகின்றன. இவற்றை விளையாட்டுப் பொருட்கள் என நினைத்து விளையாடி இதுவரை பல பாகிஸ்தான் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை பாகிஸ்தான் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் பலர் ஆப்கானிஸ்தானில் வசித்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் ஆகியவை சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கும் வந்து சேர்கின்றன. இந்த குண்டுகளை வைத்திருப்போர் வீட்டு குழந்தைகளை இதில் அதிகமாக பலியாகின்றனர். சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் இந்த விஷயத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.