வீடொன்றின் இருந்து இளம் தம்பதியின் சடலம் மீட்பு

0
199

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் தம்பதியினரின் சடலம் நேற்று (06) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

36 வயதுடைய கணவர் மற்றும் 21 வயதுடைய மனைவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் படுக்கை அறையில் இருந்து குறித்த நபர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.