மட்டக்களப்பில் ஐவருக்கு கொரோனா

0
227

மட்டக்களப்பு நாவற்குடா பொதுசுகாதார பிரிவில் 100 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை ,பூநொச்சிமுனை மற்றும் கொக்குவில் ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் ,தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என 100 நபர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பூநொச்சிமுனை கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கும் ,கொக்குவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்குமாக 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் வழிகாட்டலின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பி சி ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.