சதொச விற்பனை நிலையத்தில் மதுபான போத்தல்கள் திருட்டு

0
226

அனுராதபுரம் சதொச விற்பனை நிலையத்தின் மதுபான பிரிவு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பொது, சந்தேகநபரால் ஒரு தொகை மதுபான போத்தல்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.