இதுவரை 605 கொவிட் சடலங்கள் நல்லடக்கம்

0
235

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்த 605 பேரின் சடலங்கள் இதுவரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில், குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

572 முஸ்லிம்களின் சடலங்களும் 14 கிறிஸ்தவர்களின் சடலங்களும், 12 இந்துக்களின் சடலங்களும், 7 பௌத்தர்களின் சடலங்களும் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.