மேல் மாகாணத்தில் இன்று 200 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 258 ஆகவும், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 1350 ஆகவும் உயர்ந்துள்ளது.