இலங்கையில் மேலும் 125 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 430 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.