மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதே எதிர்க்கட்சியின் ஒரே நோக்கம் என்கிறார் சஜித்

0
203

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையேயான விசேட சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கொரோனாவால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் அதனை வெற்றி கொள்வதிலுள்ள சவால்கள், பிரச்னைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

கொரோனா பேரழிவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கும் என்றும் கட்சி பேதங்களைப் பொருட்படுத்தாது, நவீன எதிர்க்கட்சியாக நாட்டு மக்களுக்காகப் பணியாற்றுவோம் என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்தின் சில குறைபாடுகள் தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதே எதிர்க்கட்சியின் ஒரே நோக்கம் எனத் தெரிவித்தார்.