இன்று முதல் தினசரி மின்வெட்டு!

0
301

நாட்டில் நிலவும் மின் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரை தினசரி மின்வெட்டுக்கான அனுமதியை இலங்கை மின்சார சபையிடம்
அந்தக் குழு கோரியுள்ளது.
எதிர்காலத்தில் நீண்டகால மின்வெட்டு தேவைப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்
ஜனக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பல 3 ஆயிரம் மெகாவாட் ஜெனரேட்டர்களை வைத்துள்ளன என்றும் இந்த ஜெனரேட்டர்கள்
நாட்டில் மின்சார உற்பத்திக்கு உதவும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய ஜெனரேட்டர்களை வைத்திருக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறிய அவர்,
மின்சார நெருக்கடியை சரிசெய்ய தனியார் நிறுவனங்கள் தங்கள் உதவியை வழங்க ஒப்புக்கொண்டன என்றும் குறிப்பிட்டார்.