நுவரெலியா மாவட்டத்தில், மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற, அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ளமையானது, உச்சபட்ச பாரபட்சமாகும் என, மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ், கவலை வெளியிட்டுள்ளார்.இன்று, நுவரெலியா ஹட்டன் நகரில், கையொப்பம் திரட்டப்பட்ட போது, ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
அதனால், புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அந்த இலக்கை அடையும் வரை ஓய மாட்டோம் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.