கிளிநொச்சியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டம்!

0
290

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி, கொட்டும் மழைக்கு மத்தியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்;ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டமானது, இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக ஆரம்பமாகி ஏ-09 வீதி வழியாக, டிப்போ சந்தி வரை பேரணியாகச் சென்று அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமக்கான நீதியை சர்வதேசமே பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், ஐ.நாவுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜர் வேலன் சுவாமிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கானாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.