2500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்!

0
184

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, பருப்பு, சீனி, உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.