ஜ.நாவின் இயலாமை?

0
150

ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்துமாறு ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர், வலியுறுத்தியிருந்தார். செயலாளர், உருக்க மான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதாவது, இதயத்தால் வேண்டுகிறேன் – புடின், யுத்தத்தை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே அதிகமான மக்கள் இறந்துவிட்டனர் – யுத்தம் இடம்பெற்றால் இன்னும் அதிகமாக மக்கள் இறக்க நேரிடும். ஜ.நா செயலாளரின் இந்த உருக்க மான வேண்டுகோளை ரஷ்ய ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். ஜ.நா பாதுகாப்பு பேரவையில், ரஷ்யாவிற்கு எதிராக பதினொரு உறுப்பினர் களின் ஆதரவுடன் பிரேரணை கொண்டுவரப்பட்டது. ஆனால் ரஷ்யா, அதன் வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தமையினால், பிரேரணை தோல்வியடைந்தது. ரஷ்யாவிற்கு எதிரான பிரேரணையின் போது,
சீனாவும் இந்தியாவும் வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை.
இப்போது ஜ.நாவினால் என்ன செய்ய முடியும்? எதனையும் செய்ய முடியாது. இதுதான் ஜ.நாவின் உண்மையான பலவீனம். இதனை எவ்வாறு போக்குவது? உண்மையில் இதனை போக்க வேண்டுமா யின் – மீண்டுமொரு உலக மகா யுத்தம் தோன்ற வேண்டும். அந்த யுத்தத்தின் முடிவில் தற்போதிருக்கின்ற ஜ.நா கட்டமைப்பிற்கு மாற்றாக புதிய அமைப்பொன்று தோன்றலாம். ஏனெனில் இரண்டாம் உலக மகா யுத்தத்ததை தொடர்ந்துதான், ஜக்கிய நாடுகள் சபை உருவாக் கப்பட்டது. ஜ.நா உருவாக்கப்பட்டதன் நோக்கம் – மீண்டுமொரு உலக
யுத்தம் ஏற்படுவதை தடுப்பதுதான். ஆனால் ஜ.நாவினால் அந்த இலக்கை நிறைவுசெய்ய முடியவில்லை. யுத்தங்கள் இடம்பெற்று முடிந்த பின்னர் உடல்களை கணக்கெடுக்கும் வேலையைத்தான் ஜ.நா செய்து கொண்டிருக்கின்றது.
ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை நம்பித் தான், தமிழ் தேசிய அரசியல் நகர்கின்றது. கடந்த பன்னிரெண்டு வரு டங்கள் இப்படித்தான் நகர்ந்தது. ஒவ்வொரு மார்ச் மாதமும் கடிதங்கள் அனுப்புவது – யார் கடிதம் எழுதுவதென்று விவாதங்கள் செய்வது – இறுதியில் ஆளுக்கொரு கடிதங்கள் அனுப்புவது – இப்படியே பன்னி ரெண்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தால் ஓர் அடியை கூட எடுத்து வைக்கமுடியவில்லை. ஜ. நாவின் பிரேரணைகளால் நாடுகளை கடடுப்படுத்த முடியாதென்பது அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் அனை வருக்கும் நன்கு தெரிந்த விடயம்.
ஆனாலும் இந்த பிரேரணைகளை நம்பித்தான் அனைவருமே அரசியல் செய்ய முற்படுகின்றனர். இலங்கை வெளிநாடுகளின் உதவி களை நம்பியிருக்கின்ற நிலையில், பொருளாதாரத்தை முன்வைத்து சில அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய வாய்ப்பு இருந்தாலும் கூட, சீனாவின் எழுச்சி சிறிய நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை கொடுத் திருக்கின்றது. அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் உதவிகள் மறுக்கப்படுகின்ற நாடுகளுக்குள் பொருளாதாரத்தின்
மூலம் நுழைவதற்கு சீனா தயாராக இருக்கின்றது. இதனால் மேற்கு நாடுகளும் ஒரு எல்லைக்கு மேல் அழுத்தங்களை பிரயோகிக்க முடி யாது. எனவே நிலைமைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கின்றன.
எனவே இந்த சிக்கலான சூழலில் ஜ.நாவின் அழுத்தங்களை மட்டும் நம்பிக்கொண்டு தமிழர்கள் இருக்க முடியுமா? ஜ.நாவை ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு, தமிழர் அரசியல் சமூகம் மாற்று வழிகள் தொடர்பில் சிந்திக்க முன்வர வேண்டும். அந்த மாற்று வழியென்பது இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கி பயணிப்பதுதான்.
மாற்றுவழி தொரியாத வரையில், கைவசம் இருப்பதுதான் உண்மை யான மாற்றுவழி.