பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் மாவத்தகம யடிவல ஸ்ரீ குணவர்தனாராம விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.யடிவல ஸ்ரீ குணவர்தனாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஹுணுபொல ஷாந்ததேவ தேரரை சந்தித்த கௌரவ பிரதமர், அவரிடம் நலன் விசாரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து அண்மையில் திறந்துவைக்கப்பட்ட புத்தர் சிலையுடனான விகாரை பீடத்திற்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார்.
பிலெஸ்ஸ ஸ்ரீ போதிமலு விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஹுணுபொல சரணபால தேரர், வடமேல் மாகாண உப பிரதான சங்கநாயக்கர் கொடிகாபொல சாரானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.
பிரதமருடன் குறித்த வழிபாட்டு நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமித் உடுகும்புர, மஞ்சுளா திஸாநாயக்க, மாவத்தகம பிரதேச சபை தவிசாளர் கமல் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.