சர்வதேச மகளிர் தினமான இன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

0
214

சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை
முன்னெடுத்தனர்.
காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்திற்கு முன்பாக, போராட்டம் இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணமல்போன தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி நீதி கோரினர்.