பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் கைது!

0
184

வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நகைகளை திருடிய குற்றச்சாட்டுக்காக, சந்தேகநபரொருவர் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தவவலுக்கிணங்க பொகுந்தர பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொகுந்தர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பிலியந்தலை, பாணந்துறை மற்றும் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் பதிவான பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.