3700 தொன் எரிவாயு இறக்கும் பணி ஆரம்பம்!

0
139

கொழும்புத் துறைமுகத்துக்கு 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவைத் தரையிறக்கும் பணி ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்த இந்தக் கப்பலுக்கு உரிய தொகை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்தப் பணி ஆரம்பமாகியுள்ளது. இறக்கப்படும் எரிவாயு கெரவலப்பிட்டி சேமிப்பு முனையத்தில் சேகரிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளொன்றுக்கு ஒரு இலட்சம் சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.