28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரதமரின் அதிரடி அறிவிப்பு!

கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டை மீண்டும் இருண்ட காலத்திற்கு கொண்டு செல்லவிடாமல் பாதுகாக்க வேண்டும் என அனைத்து இளைஞர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles