29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இருவேறு பிரதேசங்களில் இருவர் படுகொலை

கொழும்பு, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் இருவேறு பிரதேசங்களில் இருவர் நேற்று (16) படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக கொழும்பு கோட்டவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அப்புகேவத்த பிரதேசத்தில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்புருகமுவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, மாத்தளை மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் நபரொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனேகெதரவத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles