சர்வதேச ரொட்றரியன் அமைப்பின் ஏற்பாட்டில் வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் ரொட்றரியன் தலைவர் எஸ்.புஸ்பராஜா தலைமையில் நேற்று இடம் பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி சனுஸ்காரியப்பரிடம் உபகரணங்கள் கையளிக்கப்;பட்டது.
சர்வதேச ரொட்றரியன் கழகத்தின் நிதியுதவியின் கீழ் கல்முனை ஆதார வைத்தியசாலை, திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளுக்கும் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் சாய்ந்தமருது வைத்;திய அதிகாரிகள் தாதியர்கள் ஊழியர்கள் ரொட்றரியன் கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.