27 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5813

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71,435 பேரின் நிலை கவலைக்கிடம்

0

உலக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 95 இலட்சத்து 65 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது என்று ஜொன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 214 நாடுகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,565,948 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 29,648,915 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8,808,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 71,435 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 1,108,617 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 6,521,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 8,288,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 223,644 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது. இந்தியாவில் 7,430,635 பேரும், பிரேசிலில் 5,201,570 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் (1,369,313), அர்ஜென்டினா (982,723), கொலம்பியா (965,609), ஸ்பெயின் (945,354), பெரு (862,417), பிரான்ஸ் (834,910), மெக்சிகோ (834,770), தென்னாப்பிரிக்கா (700,203), இங்கிலாந்து (689,257), ஈரான் (522,387), சிலி (488,190), ஈராக் (420,303), பங்களாதேஷ் (386,086), இத்தாலி (391,611) பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 153,229 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 113,032 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும், 23,723 உயிரிழப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

CID இன் பணிப்பாளராக நிஷாந்த த சொய்சா

0

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.