23 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

IDH ஊழியர்களுக்கு மட்டும் ஏன் கொரோனா தொற்றவில்லை?

பொதுமக்கள் முழுவதுமாக சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்தால் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்றைய தினம் (26) கம்பஹா மாவட்டத்தில் 14 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது, பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இந்த நோய் ஏற்படாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் ஐடிஎச் வைத்தியசாலை. முதல் கொவிட் நோயாளர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இனம் காணப்பட்டார். அவர் சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் பலர் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய தினத்தில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அநேகமானோர் ஐடிஎச் வைத்தியசாலையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு சுகாதாரப் பிரிவினர் அறிவித்ததன் படி, நேற்றைய தினம் வரையில் ஐடிஎச் வைத்தியசாலையில் எந்த ஒரு ஊழியருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதன் ரகசியம் என்ன? புதிதாக ஒன்றுமில்லை.

அதுதான் முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகும். அங்குதான் அநேகமான கோவிட் நோயாளிகள் உள்ளனர். எனினும் ஒரு ஊழியருக்கு அல்லது சுகாதார பிரிவினருக்கும் இந்த நோய் பரவவில்லை. இவற்றை கடைப்பிடித்ததனால் இது சாத்தியமானது´ என்றார்.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...