அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழா!

0
199

அம்பாறை அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின், முப்பதாவது ஆண்டு நிறைவின் முத்து விழா நேற்று இடம்பெற்றது.

அக்கரைப்பற்று இந்து ,இளைஞர் மன்ற தலைவர் கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பிரார்த்தனை மண்டப திறப்பு விழா மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், முத்து விழா கையேடு இறைபணிச்செம்மல் கயிலாயபிள்ளையினால் அதிதிகளுக்கு வழங்கப்பட்டது.

முத்து விழா நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பபாகரன் உள்ளிட்ட பலர் இந்து, இளைஞர் மன்றம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

வை.எம்.எச்.ஏ. பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்பியினாக தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,ஆலயங்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

முத்து விழா நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பபாகரன், திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன, கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தைகள் திணைக்கள் ஆணையாளர் றிஸ்வாணி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி விஜயதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.