நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது இவர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதில் அவர், பேங்க் கொள்ளையர் ரோலில் நடித்து இருப்பார்.
இந்நிலையில் துணிபு பட பாணியில் திண்டுக்கல் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துணிவு படத்தில் வரும் வங்கி கொள்ளை போல தானும் கொள்ளையடிக்க முயன்றதாக கைதான இளைஞர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.