வரி செலுத்துவதை முறையான முறையில் மேற்கொள்ளும் வகையில் அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
வரி செலுத்தும் வலையமைப்பை இனங்கண்டு அதனை விரிவுபடுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.