அத்தியாவசிய மருந்துக் கொள்வனவிற்காக 10 கோடி டொலர் ஒதுக்கீடு!

0
133

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவிற்காக, ஏனைய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி டொலர் நிதியை சுகாதார அமைச்சிற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி வேலைத் திட்டத்திலிருந்து 7 கோடி அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்சரிவு இடர்களை குறைப்பதற்கான வேலைத்திட்டத்திலிருந்து 3 கோடி டொலர் நிதி, சுகாதார அமைச்சின் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.