அனுமதிபத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

0
183

நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 28, 37, 38 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைதுசேய்யப்ட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.