அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர்

0
3

அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என்று ஈரான் உச்ச தலைவர் ஐயத்துல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது.

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம் என கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி ஈரான் தலைவர் கமெனியின் பிரதிநிதி கூறும்போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது தாக்குவோம்.

தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என ட்ரம்பும் எச்சரித்துள்ளார்.

ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.