வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மே 2 முதல் 5 வரை நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தென் கொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
மே 4ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆளுனர்களுக்கான வர்த்தக அமர்வில் இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தற்போதைய ஈடுபாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இந்த நிகழ்வின் பக்க அம்சமாக பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.