28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை பெரியநீலாவணை பொலிஸார் அதிரடி: திருட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர்கைது

அம்பாறை பெரியநீலாவணையில், போதைப் பொருள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பெரிய நீலாவணைப் பகுதியில், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில், பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் வீடொன்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது அங்கிருந்த இருவரைக் கைது செய்த பொலிஸார், வீட்டில் நடாத்திய சோதனை நடவடிக்கையில் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும் மீட்டனர்.

சந்தேக நபர்களை நேற்றைய தினம், நீதிமன்றில், பெரிய நீலாவணைப் பொலிஸார் முற்படுத்தியபோது, எதிர்வரும் 25ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, பல வீடுகளில் திருப்பட்ட நகைகளும், உருக்கப்பட்டு, நகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
திருட்டு நகைளை கொள்வனவு செய்த நகைக் கடை உரிமையாளர்களையும் சட்ட நடவடிக்கைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles