அரிசியில் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு அடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

0
353
இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடையும் வகையில் அடுத்த ஆறு பயிர் காலங்களில் நாட்டில் நெற்செய்கையை இரட்டிப்பாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.தற்போது இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நெற்செய்கைகளிலும் ஒரே மாதிரியான அறுவடையை பெற முடியவில்லை.இந்த நாட்டில் நெல்லின் சராசரி விளைச்சல் ஹெக்டேருக்கு 2.5 முதல் 4.5 மெட்ரிக் தொன் நெல் வரை மாறுபடும். மேலும், தென்கிழக்கு ஆசியாவிலேயே ஒரு ஹெக்டேருக்கு அதிக நெல் விளைச்சல் என சில மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் 11 மெட்ரிக் தொன்கள் வரை பதிவு செய்துள்ளனர்.இலங்கையின் நெல் செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதுடன், அரிசியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இலங்கை அரிசிக்கான சர்வதேச தேவையை உயர்வாக பேணுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.எனவே விவசாயிகளுக்கு நெல் விளைச்சலை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் அதேவேளை விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.தற்போது இலங்கையில் நெல் வயல்களின் எண்ணிக்கை 800,000 ஹெக்டேர்களாகும். இரண்டு பருவங்களில் பயிரிடப்படும் நெல் அளவு ஆண்டுக்கு 1.3 மில்லியன் ஹெக்டேர். நெல்லின் மொத்த விளைச்சல் சுமார் 5.2 மில்லியன் மெட்ரிக் தொன் ஆகும். உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு 3.1 மில்லியன் மெட்ரிக் தொன் ஆகும், அதேவேளையில் 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி நாட்டில் நுகர்வுக்கு வருடாந்தம் தேவைப்படுகிறது.நாட்டில் போதியளவு அரிசி இருந்த போதிலும், அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, குறைந்த விலையில் அரிசியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு இடமளிக்கும் நோக்கில் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். .