அறுவை சிகிச்சையின் போது இறந்த குழந்தை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
9

கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று வயதுக் குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போதே வழக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறும்இ தற்போது வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர் நவீன் விஜேகோனின் வாக்குமூலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பின்னர் குழந்தையின் மரணம் தொடர்பான தீர்ப்பை வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.